இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Tuesday, 27 November 2012

thumbnail

மஸ்ஜித் இப்ராஹீம் - புதிய புகைப்படங்கள்

Posted by NACHIKULAM TNTJ  | 







thumbnail

முஹர்ரம் நோன்பு இஃப்தார்

Posted by NACHIKULAM TNTJ  | 

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம்கிளை சார்பாக கடந்த 24, 25,-11-2012 ( முஹர்ரம் 9, 10 ) ஆகிய தேதிகளில் முஹர்ரம் நோன்பு திறப்பதற்கா இஃத்தார் ஏற்ப்பாடுகள் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் செய்யப்படது.



Tuesday, 20 November 2012

thumbnail

மாற்றுமத தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 


திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 19-11-2012 அன்று மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து அவருக்கு எடுத்துறைக்கப்பட்டு இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

thumbnail

நாச்சிகுளத்தில் - மாவட்ட மாணவரணி ஒருகினைப்பு கூட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 



நாச்சிகுளம் கிளையில் கடந்த 18-11-2012 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட மாணவரணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட மருத்துவரணி செயலாளர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாநில தலைமை மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் சிறப்புரையாற்றினார். நாச்சிகுளம் கிளை-துபை பொறுப்பாளர் சகோதரர் அரசுதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். 

இதில் மாவட்டத்திலிருந்து 80க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 14 November 2012

thumbnail

ஆட்டோ விளம்பரம் : மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தை அறியும் வழிகள்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 13/11/2012 அன்று மாற்றுமதத்தவர்கள் எளிதாக இஸ்லாத்தை அறிந்துகொள்ளும் வழிகள் எப்படி என்பதை விளக்கும் வகையில் ஆட்டோகளில் போஸ்டர் ஒட்டி அதன் மூலம் விளம்பரம்  செய்யப்பட்டது !



Sunday, 11 November 2012

thumbnail

பெண்கள் பயான் : இறைநேசத்தை பெறுவது எப்படி

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக 11-11-2012 அன்று மாலை 5மணியளவில் நடுத்தெரு, நூர்தீன் அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் பள்ளியின் இமாம் ஆரிஃப் அவர்கள் ”இறைநேசத்தை பெறுவது எப்படி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.




இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 10 November 2012

thumbnail

நாச்சிகுளம் கிளையின் அமீரக ஒருங்கினைப்பு கூட்டம் :

Posted by NACHIKULAM TNTJ  | 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு கூட்டம்  ஹோர் அல்-அன்ஸ் (Hor Al-Anz) கிளையில் கடந்த 9-11-2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் சகோதரர் துபை மண்டல செயலாளர் அஸ்ரஃப் அலி அவர்கள் முன்னிலை வகித்தார். துபை மண்டல தலைவர் முஹம்மது அலி அவர்கள் ஜமாஅத்தின் பனிகள் மற்றும் ஜமாஅத்துடன் இணைந்து செய்யும் பனிகளின் அவசியம் குறித்தும் தெளிவாக விளக்கினார்கள். 





இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 9 November 2012

thumbnail

யார் இவர்? நோட்டீஸ் வினியோகம் : நாச்சிகுளம் TNTJ

Posted by NACHIKULAM TNTJ  | 

கடந்த நவம்பர் 7, 2012 அன்று மாநில தலைமை நவம்பர் மாத தலைமைகழக சுற்றறிக்கை! என்ற செய்தியை வெளியிட்டு, அவை...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளின் கவனத்திற்கு,
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
சமீபத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து நாம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினோம். மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம், இதுசம்பந்தமான பிரசுரங்கள் மற்றும் குறுந்தகடுகள் போன்றவைகளையும் நாம் பல்வேறு எண்ணிக்கையில் விநியோகித்தோம்.
அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தை (நவம்பர் 2012) நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் செய்திகளை பிற மத சகோதரர்களுக்குக் கொண்டு செல்லும் முகமாக பிரச்சாரம் செய்யும் மாதமாக செயல்படுத்த மாநிலத் தலைமை முடிவு செய்திருக்கிறது. அதன்படி இந்த மாதம் முழுவதும் அது சம்பந்தமான பிரச்சாரங்களாக
·தெருமுனைக்கூட்டங்கள்
·பொதுக்கூட்டங்கள்
·பெண்கள் பயான்
·துண்டு பிரசுரங்கள்
·பேணர்கள்
·போஸ்ட்டர்கள்
·காவல்துறை மற்றும் ஊடகத்துறை உளவுத்துற ஆகியவைகளின்
·அதிகாரிகளுக்கு மாமனிதர் மற்றும் யார் இவர் என்ற தலைப்பில் உள்ள பிரசுரங்கள் வழங்குதல்
· பிற மத சகோதரர்களுக்கும் இந்தப் பிரசுரங்கள் வழங்குதல்
ஆகிய பணிகளோடு இம்மாதத்தின் அனைத்து வெள்ளி மேடை உரைகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நற்பெயருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)

--------
என்ற தலைமை அறிவிப்பின் படி நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று 09-11-2012 அன்று மாலை 3மணி முதல் 7மணி வரை, நாச்சிகுளம் பகுதி ECR சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆட்டோகளில் ”யார் இவர்?” என்ற தலைப்பில் உள்ள முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியை விளக்கும் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...





Wednesday, 7 November 2012

thumbnail

தனி நபர் தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 03/11/2012 அன்று மாலை ஆட்டோ ஸ்டாண்டில், உள்ளிட்ட நாச்சிகுளம் கடை தெரு பகுதியில் தனி நபர் தாவா நடைபெற்றது.  இதில் நபிகள் நாயகம் வளர்த்த சகோதரரத்துவம் குறித்து தெளிவாக சகோ.மும்தாஜ் அலி அவர்கள் எடுத்துரைத்தார். 

Thursday, 1 November 2012

thumbnail

இயற்கை சீற்றங்கள் தரும் படிப்பினைகள்

Posted by NACHIKULAM TNTJ  | 

இன்ற உலகில் இயற்கை சீற்றங்கள் என்பது அதிகரித்த வன்னமே உள்ளது. நாம் வாழும் வாழ்வில் இயற்கைக்கும் பின்னால் ஒரு சக்தி (இறைவன்) இருக்கிறான் என்பதை நாம் அனைவரும் அறிந்தவையே. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவை தாக்கிய சாண்டியாக இருந்தாலும் சரி, தமிழகத்தை தாக்கிய தானே, நீலமாக இருந்தாலும்... இவற்றுக்குப் பின் உள்ள இறைவனின் சக்தியே என்பதை நாம் அறிவோம். இவைகள் ஏற்ப்பட காரணம் என்ன? இது போன்ற சீற்றங்களில் இறைநம்பிக்கையாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா? என்ற கேள்விகள் நம் மத்தியில் எலலாம்.


ஓரிக் கொள்கை மறுப்புவிபச்சாரம்அளவு மோசடி,துரோகம்ஓரினச் சேர்க்கைலஞ்சம்நீதியின்மைதீவிரவாதம்,அமானித மோசடிகொலைகொள்ளைவரதட்சனைபொய்,பித்தலாட்டம் இதுப் போன்ற ஏராளமான செயல்களை மனிதநேயத்திற்கும் மனிதனுக்கும் இந்த சமுதாயம் செய்துவருகிறது.

முந்தைய வரலாற்றில் படிப்பினை
ஷுஐப் (அலை)

அளவில் மோசடி செய்தவர்கள்
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ 7:85
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபைஅனுப்பினோம். "என் சமுதாயமேஅல்லாஹ்வை வணங்குங்கள்!உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறுயாருமில்லைஉங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்றுவந்துள்ளதுஎனவே அளவையும்நிறுவையையும்நிறைவாக்குங்கள்மக்களுக்கு அவர்களின் பொருட்களைக்குறைத்து விடாதீர்கள்பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்நீங்கள் நம்பிக்கைகொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர்கூறினார்.
அல்குர்ஆன் : 7: 85

பூகம்பம் தாக்கியது
فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (91) الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ (7:92)
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியதுகாலையில் தமதுவீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர்(அதற்கு முன்அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள்.ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே இழப்பைஅடைந்தோரானார்கள்.
அல்குர்ஆன் 9:91,92

லூத் (அலை)
ஓரினச் சேர்க்கை ஈடுபட்டார்கள்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ (80) إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ (7:81)
"நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம்செல்கிறீர்கள்நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.) இவர்களை உங்கள் ஊரை விட்டுவெளியேற்றுங்கள்இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்''என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
அல்குர்ஆன் 7: 81,82
மழையால் அழிக்கப்பட்டன
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ (82) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ (11:83)
நமது கட்டளை வந்த போதுசுடப்பட்ட கற்களால் அவ்வூரின்மீது கல் மழை பொழிந்துஅதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.  (அவைஉமது இறைவனிடம்அடையாளமிடப்பட்டதுஅவ்வூர் (இந்தஅநீதி இழைத்தோருக்குத்தொலைவில் இல்லை.
அல்குர்ஆன் 11:82,83

ஸமூது (அலை)
ஆணவம் கொண்டவர்கள்
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6) إِرَمَ ذَاتِ الْعِمَادِ (7) الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ (8) وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ (9) وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10) الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11) فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ (12) فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ (89:13)
ஆதுதூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமதுஇறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையாஉலகில் அவர்களைப் போல் (யாரும்படைக்கப்படவில்லைமலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்) ஸமூதுசமுதாயத் தையும்படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படிஆக்கினான்?)  அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்எனவே உமது இறைவன்வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
அல்குர்ஆன் 89: 6,13

மிக கடுமையான புயல்
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (15) فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنْصَرُونَ (41:16)
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம்கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக்கேட்டனர்அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விடவலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையாஅவர்கள்நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.  எனவே இவ்வுலகவாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச்செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றைஅனுப்பினோம்மறுமையின் வேதனை (இதை விடமிகவும்இழிவுபடுத்தக் கூடியதுஅவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 41:15,16
பெரும் சப்தம்
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
            ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால்அழிக்கப்பட்டனர்.  ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யானகொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்அதை ஏழு இரவுகளும்எட்டுபகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான்.அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப்போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்அவர்களில் எஞ்சியோரை நீர்காண்கிறீரா?
அல்குர்ஆன் 69:5,8

பிர்அவ்ன் சம்பவம்
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (28:4)
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான்அதில்உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப்பலவீனர்களாக ஆக்கினான்அவர்களில் ஆண் மக்களைக்கொன்றான்பெண்(மக்)களை உயிருடன் விட்டான்அவன் குழப்பம்செய்பவனாக இருந்தான்.
அல்குர்ஆன் 28:4
என்னை தவிர வேற இறைவன் இல்லை
وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي (28:38)
"பிரமுகர்களேஎன்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளைநான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே!எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறிமூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும்அவர்பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.
அல்குர்ஆன் 28:38
நான் மிகப் பெரிய இறைவன்
فَحَشَرَ فَنَادَى (23) فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى (79:24)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
அல்குர்ஆன் 79:24
கடலில் மூழ்கடிக்கப்பட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)10
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவ்னும்அவனது படையினரும் அக்கிரமமாகவும்அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்முடிவில் அவன் மூழ்கும்போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிரவணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்நான்முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்குழப்பம் செய்பவனாகஇருந்தாய்உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காகஉன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:91,92
ஒழுக்க கேடு
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (17:32)
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்அது வெட்கக்கேடானதாகவும்,தீய வழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் 17:32
நபி (ஸல்அவர்களின் காலத்தில் இதுப்போன்ற அழிவு ஏன்ஏற்படவில்லை?
18 أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك * رواه البخاري
பத்ருப்போரில் கலந்துகொண்டவரும்இரவில் நடந்த அகபாஉடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டுதலைவர்களில்ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலிஅவர்கள்கூறியதாவது:
(ஒருநாள்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் தம்மைச்சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க,"அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்இணையாக்கமாட்டீர்கள்என்றும்திருட மாட்டீர்கள் என்றும்விபசாரம் புரியமாட் டீர்கள்என்றும்உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்,நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள்என்றும்எந்த நல்ல காரியத் திலும் (எனக்குமாறு செய்யமாட்டீர்கள்என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்உங்களில் எவர் (இந்தஉறுதிமொழியின் மீதுநிலைத்திருக்கிறாரோ அவருக்கரியநற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில்(மேற்கூறப்பட்ட குற்றங்களில்ஏதேனுமொன்றை ஒருவர் செய்து,அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால்அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும்இவற்றில்ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை(உலகவாழ்வில்மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின்பொறுப்பில் விடப்படுகிறார்அவன் நாடினால் அவரைத்தண்டிப்பான்அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்றசொன்னார்கள்உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்)அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
நூல் : புகாரி 18
7056 عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةً عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنْ اللَّهِ فِيهِ بُرْهَانٌ * رواه البخاري
"நாங்கள் உற்சாகமாயிருக்கும்போதும்சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும்சிரமத்திலிருக்கும்போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமைவழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச்செவியேற்று (அவருக்குக்கீழ்ப்படிந்து நடப்போம்;ஆட்சியதிகாரத்தி-ருப்பவர் களுடன் நாங்கள்சண்டையிடமாட்டோம்;  எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்புஎன்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம்கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள்கண்டாலே தவிர'' என்று எங்கüடம் நபி (ஸல்அவர்கள் உறுதிமொழிவாங்கியதும் அவர்கள் எங்கüடம் பெற்ற பிரமாணங்கüல் அடங்கும்.
நூல் : புகாரி 7056
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ  60:12
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள்உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்திருட மாட்டோம்விபச்சாரம் செய்ய மாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்நல்ல விஷயத்தில்உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழிகொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராகஅவர்களுக்காகஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராகஅல்லாஹ்மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 60:12
மனித நேயம் என்றால் என்ன?
மனிதனுக்கு இரக்கம் காட்ட வேண்டும்
7376 عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ *  رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ்கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 7376

13 أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ * رواه البخاري
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம்சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையானஇறைநம்பிக்கைகொண்டவர் ஆக மாட்டார்.
இதை அனஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 13
4578 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ * رواه مسلم

தீமை பெருகி விட்டால் நல்லவர்கள் அழிக்கப்படுவார்கள்
3346 قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ * رواه البخاري
நான் "அல்லாஹ்வின் தூதரேநம்மிடையே நல்லவர்கள்இருக்கநாம் அழிந்து விடுவோமா'' என்று கேட்டேன்அதற்கு நபி(ஸல்அவர்கள் "ஆம்தீமை பெருகிவிட்டால்...'' என்றுபதிலüத்தார்கள்.
நூல் : புகாரி 3346.

நன்றி - ராஜ்முகம்மது, Misc.

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top